வாணாபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

வாணாபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிழந்தா.
வாணாபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
Published on

வாணாபுரம், 

வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூர் அருகே உள்ள நிலத்தின் அருகே சாலையோரம் 60 வயது முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று, அந்த முதியவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com