வாகனம் மோதி முதியவர் சாவு

பரசேரி பகுதியில் வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
வாகனம் மோதி முதியவர் சாவு
Published on

திங்கள்சந்தை:

தோட்டியோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் நெடுஞ்சாலையில் பரசேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் உடலில் காயங்களுடன் கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த நபர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, இறந்தவர் நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 76) என்பதும், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானதும் தெரியவந்தது. மேலும், இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com