புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம்

வடக்குமாங்குடியில் புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டது.
புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம்
Published on

மெலட்டூர்

வடக்குமாங்குடி ஊராட்சி, வெள்ளாளர் தெரு அருகில் இயங்கி வந்த மின்மாற்றி அடிக்கடி பழுதடைந்து மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மின்தடை குறித்து ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் அய்யம்பேட்டை மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தார்.இதன்பேரில் அய்யம்பேட்டை மின்வாரிய உதவிபொறியாளர் வரதராஜன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுத்திய பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. மின்தடைக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com