மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 5-ந் தேதி நடக்கிறது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

திருவிடைமருதூர்;

கும்பகோணம் வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 5-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார்கோயில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை. திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம். பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்ட பகுதி மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை கும்பகோணம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கலையரசி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com