மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் இறந்தார்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
Published on

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வானாங்கரடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 25), எலக்ட்ரீசியனான இவர் நேற்று முன்தினம் மாலை பைப்பூர் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com