சென்னையில் வரும் 5ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை அடையாறு கோட்டத்தில் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் கலந்து கொண்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் வரும் 5ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 5.3.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ இ&ப/ அடையாறு, தரைதளம், வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com