ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்


ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Dec 2025 8:52 AM IST (Updated: 8 Dec 2025 9:31 AM IST)
t-max-icont-min-icon

யானை தந்தங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய கீழக்கரை மரைன் போலீசார் , இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை இன்று பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ. 1 ஆகும். இந்த யானை தந்தங்கள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story