கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது கார் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி
Published on

பரமத்திவேலூர்

மின் வாரிய ஊழியர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தளிகை, சுப்பன்நாய்க்கனூரைச் சேர்ந்தவர் தலமநாய்க்கர். இவரது மகன் இளமுருகன் (வயது 46). இவர் நாமக்கல், நல்லியாம்பாளையம் மின்சார வாரியத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் காலை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்செங்கோடு நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேலகவுண்டம்பட்டி, கணக்கம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென இளமுருகன் சென்ற மொபட் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திலேயே பலி

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளமுருகன் மீது மோதிய கார் சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் கணேசன் (38) காயம் அடைந்து நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான இளமுருகனுக்கு பத்மினி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com