மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி
Published on

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சின்னராசு என்கிற தெய்வகணேசன் (வயது 32). ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் விடுமுறையில் நேற்று தெய்வகணேசன் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் ஆதனூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்த மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனைவாரி பகுதியில் சென்றபோது, அங்கு சாலை விரிவாக்கபணிக்காக கொட்டப்பட்டிருந்த செம்மண் மேட்டில் அவர் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த தெய்வகணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துபரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த தெய்வகணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com