கார்த்திகை மாதம் நிறைவு - காசிமேட்டில் களைகட்டும் மீன் விற்பனை

காசிமேட்டில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.
கார்த்திகை மாதம் நிறைவு - காசிமேட்டில் களைகட்டும் மீன் விற்பனை
Published on

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள், விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க சென்னையின் பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து இருந்தனர். மேலும், கார்த்திகை மாதம் முடிவடைந்த நிலையில், மீன் பிரியர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை சற்று குறைவாக உள்ளது. இதனால், மீன் பிரியர்கள் ஆர்வமுடன் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com