தக்கலை அருகே போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருக போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து காண்டார்.
தக்கலை அருகே போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
Published on

தக்கலை:

தக்கலை அருக போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து காண்டார்.

என்ஜினீயர்

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பருத்திக்கோட்ட விளையை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது24). என்ஜினீயரிங் படித்த இவர் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி வந்தார். இதனால் பெற்றோர் இவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, பிரகாஷ் வீட்டில் இருந்த படியே பெற்றோரின் கண்காணிப்பில் மருந்து சாப்பிட்டு வந்தார். இதனால் வெளியே சென்று போதை பொருட்களை வாங்க முடியாமல் தவித்தார்.

இதில் விரக்தியடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

அவரை குடும்பத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com