தீக்குளித்த என்ஜினீயர் சாவு

ஒரு தலை காதல் விவகாரத்தில் தீக்குளித்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
தீக்குளித்த என்ஜினீயர் சாவு
Published on

வடமதுரை அருகே உள்ள சீலப்பாடியான் களம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் பெரியதுரை (வயது 24). சிவில் என்ஜினீயர். இவர் வடமதுரை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அவருடைய பெற்றோர், பெரியதுரையை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 18-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பெரியதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com