

விருதுநகர் ,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை, அவரது செல்போலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரபாகரனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு பிரபாகரனின் உடலை மீட்டனர்.
அப்போது அவரது எழுத்தில், அரியானால் வெட்டப்பட்ட ரத்தக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக பிரபாகரன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலிக்குமாறு பின்தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
அந்த பெண் பிரபாகரனை கண்டித்தபோதிலும், அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை மற்றும் சகோதார் பிரபாகரனை சந்தித்து கண்டித்தனர். இருப்பினும் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரபாகரனை கொலை செய்ய சுரேஷ் திட்டமிட்டு செல்போன் மூலம் மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சுரேஷ், அவரது நண்பர் மதுரை விளாங்குடியை சேர்ந்த விக்னேஷ்வரன் ஆகியோருடன் சேர்த்து பிரபாகரன் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மகள் காதல் விவகார பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திர மடைந்த சுரேஷ் தான் மறைந்து வைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் நண்பர் உதவியுடன் உடலை அங்குள்ள கிணற்றில் போட்டுவிட்டு 2 பேரும் தப்பினர். இதையடுத்து சுரேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.