ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம்
Published on

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, போலீஸ்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை -உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் துரிதப்படுத்தி வரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தேஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், செல்வராஜன் (வளர்ச்சி), மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com