பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள்
Published on

பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் 11, 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் கட்டுரை, பேச்சு, கவிதைப்போட்டிகள் நடத்தி பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான போட்டிகள் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சபீர்பானு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். கட்டுரை போட்டியில் பொன்னமராவதி, லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் தேஜன்யா முதலிடமும், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி நிவேதா 2-வது இடமும், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி கரிஷ்மாரோஸ் 3-வது இடமும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி நிரஞ்சனா முதலிடமும், மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலெட்சுமி 2-வது இடமும், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுரேஷ்குமார் 3-வது இடமும் பெற்றனர். கவிதை போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி செந்தமிழ் முதலிடமும், கைக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜா 2-வது இடமும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி ஜோஷிகா 3-வது இடமும் பெற்றனர். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட உள்ளது. முன்னதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் வரவேற்றார். முடிவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் சுப்புராமன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com