

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையின் புறநகர்ப் பகுதியில், பட்டப்பகலில், மக்கள் சூழ, ஒரு குடியிருப்புப் பகுதியில், ஒரு கும்பல் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்தது; அதன் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.
தற்போதைய திமுக அரசின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை இதுதான்.
அந்தக் கொடூரச் செயலைக் கண்டு மக்கள் அதிர்ச்சியோடும் பீதியோடும் அங்கே நின்றிருந்தனர். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு, மிக அடிப்படையான பாதுகாப்பு உணர்வு கூட இப்போது ஒரு தொலைதூர நினைவாகிவிட்டது.என தெரிவித்துள்ளார்.