முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்திருந்த வழக்கை ரத்த செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டு அவர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார். இதுபோன்று மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கையும் நீதிபதி இளந்திரையன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com