கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

சங்கரன்கோவில் அருகே கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவர் சங்கரன்கோவிலில் சொந்த வேலையை முடித்து விட்டு மலையாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com