கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில்களின் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்
கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில்களின் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே திடகாத்திரமான உடல் மற்றும் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்புக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com