கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் - பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்...!

கோவையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் - பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்...!
Published on

சரவணம்பட்டி,

கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு குழாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் பொருத்தப்பட்டு அந்த குழாய் வழியாக சோதனைக்காக இன்று எரிவாயு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று திடீரென எரிவாயு குழாய் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த எரிவாயு விபத்தில் பொது மக்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பு இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தற்காலிகமாக குழாய் பாதிக்கும் பணியை நிறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com