மின்சார ரெயில் டிக்கெட்களை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரும் வசதி விரைவில் அறிமுகம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் டிக்கெட்களை பெரும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின்சார ரெயில் டிக்கெட்களை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரும் வசதி விரைவில் அறிமுகம்
Published on

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மெட்ரோ ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக பெட்ரோ ரெயில் நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை பெரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com