தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). டெய்லர். இவரது மகன் மனோ ஆதித்யா(16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானதில் மனோ 2 பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட மனோ ஆதித்யா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





