ஆலமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூ அருகே ஆலமரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் ரோட்டில் பொன்னாங்கண்ணி கண்மாய் அருகே இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கோவில் பின்புறம் இருந்த மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com