இளம்பெண்ணை காதலித்து உல்லாசம்: நூல்நிலைய ஊழியர் மீது கற்பழிப்பு வழக்கு - சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து, உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நூல் நிலைய ஊழியர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளம்பெண்ணை காதலித்து உல்லாசம்: நூல்நிலைய ஊழியர் மீது கற்பழிப்பு வழக்கு - சென்னையில் பரபரப்பு சம்பவம்
Published on

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தில் ஊழியராக வேலை செய்பவர் மணிஅரசு (வயது 29). இவர் மீது இளம் பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

மணிஅரசு என்னை காதலிப்பதாக கூறி அன்பாக பழகினார்.என்னை திருமணம் செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அதை உண்மை என்று நம்பி அவருடன் நெருக்கமாக பழகினேன். இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அதன் பலனாக இருமுறை நான் கர்ப்பம் அடைந்தேன். அவரது வற்புறுத்தலின்பேரில் இரண்டு முறையும் நான் கருவை கலைத்தேன். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது சொந்த ஊரான திருச்சி துறையூரில் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார்மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் மணிஅரசு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, மணிஅரசு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.அதன்பேரில் அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com