விஷம் குடித்து விவசாயி தற்கொலை

ஆரணி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

ஆரணி

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 47), விவசாயி. இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு காமாட்சி கீழ் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரத்தி அடைந்த வேல்முருகன் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேல்முருகனின் தந்தை மண்ணு ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com