தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

மயிலாடும்பாறை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
Published on

மயிலாடும்பாறை அருகே உள்ள ஆட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). விவசாயி. அவருடைய மனைவி அழகுபொண்ணு. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த செல்வக்குமார், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com