தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
Published on

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கமலகண்ணு (வயது 58), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு கீர்த்திவாசன், பத்மவாசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாப்பாத்தி பெரம்பலூர் கோர்ட்டில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பத்மவாசன் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். கமலகண்ணு நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கமலகண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கமலகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலகண்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com