மின்சாரம் தாக்கி விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 60). விவசாயி. இவர் வீட்டின் அருகே மாட்டு தொழுவம் அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை அய்யனார் மாட்டுத்தொழுவம் அருகே உள்ள மின்கம்பத்தில் கட்டிப்போட்டு இருந்த மாட்டை அவிழ்க்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் அவரது கை பட்டதில், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அய்யனார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com