விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

சேரம்பாடியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
Published on

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வேண்டும், மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பந்தலூர் அருகே சேரம்பாடியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் யோகண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா, நிர்வாகி பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com