விதை தொகுப்புகளை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விதை தொகுப்புகளை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
விதை தொகுப்புகளை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகளை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் புல் கறணைகளுடன் பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி வழங்கப்படும்.

இத்திட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், புல வரைபடம் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மேலும் இத்திட்டத்திற்கு கூடுதலாக கோரப்படும் ஆவணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 225-ல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கூடுதல் விவரம் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com