விவசாயிகள் சங்க கொடியேற்று விழா

பட்டுக்கோட்டை அருகே விவசாயிகள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
விவசாயிகள் சங்க கொடியேற்று விழா
Published on

கரம்பயம்;

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்டாங்காடு ஊராட்சியில் பட்டுக்கோட்டை, மன்னார்குடி மெயின் ரோடு நெடுஞ்சாலை அருகே அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது. தேசிய தலைவர் செல்வகணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவுக்கு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில தலைவர் தன்ராஜ் கொடியை ஏற்றி வைத்தார். சட்ட ஆலோசகர் செந்தில்குமார் பேசினார். அப்போது அவர் விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளை கையாள வேண்டும் என கூறினார். விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com