பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.
பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com