குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது

குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாதம் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் நேரில் பெறப்படும். இந்த மனுக்களை பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டு உள்ளது. எனவே கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com