விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது
Published on

 பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் கற்பகம் தலைமையில் நாளை மறுதினம் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன்உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள்மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்துவிவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளைதெரிவிக்கலாம். 

X

Daily Thanthi
www.dailythanthi.com