விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது
Published on

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com