செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த விவசாய நலன் காக்கும் கூட்டம் வருகிற 22-06-2023 வியாழன் கிழமை காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் விவசாய நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com