திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியாக சென்றனர்.
திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி
Published on

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான உழவர் சந்தையில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதி வரை பேரணியாக சென்றனர்.

அங்கு விவசாயிகள் அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com