இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாமனார் கைது

நெல்லையில் இளம்பெண்ணை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற அவரது மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாமனார் கைது
Published on

நெல்லையில் இளம்பெண்ணை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற அவரது மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவரது மகன் தமிழரசன். ராணுவ வீரர். இவருடைய மனைவி முத்துமாரி (26).

தங்கராஜ் மனைவி இறந்துவிட்டதால் அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்தார். இதற்காக தனது மருமகள் முத்துமாரியை வீட்டை காலி செய்யக்கூறி வற்புறுத்தினார். ஆனால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் தங்கராஜ் தனது மருமகள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

சாவு

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த முத்துமாரியை தலையில் இரும்பு கம்பியால் தங்கராஜ் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் முத்துமாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாமனார் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தங்கராஜை நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com