பெண் என்ஜினீயர் மர்ம சாவு

பெண் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்தார்.
பெண் என்ஜினீயர் மர்ம சாவு
Published on

திருச்சி கே.கே.நகர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா(வயது 23). என்ஜினீயரான இவருக்கு கடந்த ஜூன் மாதம் மதுரையை சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இதையடுத்து அவரது கணவர் பிரதீப்ராஜ் வேலை நிமித்தமாக பெங்களூரு சென்றார். இதனால் சந்தியா, திருச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்திருந்தார்.

கடந்த 9-ந்தேதி தனது வீட்டில் சந்தியா மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினர்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அவருடைய தந்தை வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com