பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிமுகம் செய்து வைத்தார்

பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் பெறுவதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது.
பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிமுகம் செய்து வைத்தார்
Published on

சென்னை,

வீட்டில் இருந்தபடி தொழில் செய்யும், பகுதி நேரமாக பணிபுரியும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் வழங்கும் விழாவை பிராண்ட் அவதார் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்தியது. அதேபோல், சுயசக்தி விருது-2018 வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி இசை மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் சென்னையில் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்த விருதுகள் பெற 4 ஆயிரத்து 328 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு சுயசக்தி விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் இந்த ஆண்டு சுயசக்தி விருதுகள் பெறுவதற்கு தகுதியுள்ள பெண் தொழில் முனைவோர்கள்

www.homepreneurawards.com, www.suyasakthi.com என்ற இணையதளத்தில் சென்று வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com