விஷம் குடித்து பெண் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜோதி என்கிற லட்சுமி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜோதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார். ஜோதி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com