பெண் தற்கொலை முயற்சி

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் தற்கொலை முயற்சி
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி மனோன்மணி (வயது40). இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மூத்த சகோதரி அதே தேருவைச் சேர்ந்த

ஜெயசிங் மனைவி அமுதா (41). இவர், உறவினர்களான ஏசுவடியான், எலிசபெத் ஆகியோரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தாராம். அதனை அவர்கள் கேட்டபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தாராம். இதனை அறிந்த மனோன்மணி, அமுதாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் மனமுடைந்த மனோன்மணி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com