வளவனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வளவனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வளவனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வளவனூர் அருகே உள்ள குடுமியாங்குப்பம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகள் ஜெயலட்சுமி (வயது 23). இவர் பி.எஸ்சி. வேதியியல் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com