தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டா.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 48). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது முத்துலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com