திருப்போரூர் அருகே பெண் தற்கொலை

திருப்போரூர் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்ட பெண் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்போரூர் அருகே பெண் தற்கொலை
Published on

திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமம் சாவடி குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கண்மணி (வயது 55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் வீட்டிலேயே இருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த கண்மணி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது உடலில் தீ மளமளவென பரவியதால் கண்மணி கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்களும், கணவரும் கண்மணியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com