தஞ்சையில் குறுவை சாகுபடி இறுதிகட்ட பணிகள் தீவிரம்: 1.38 லட்சம் ஏக்கரை தாண்டி நடவு


தஞ்சையில் குறுவை சாகுபடி இறுதிகட்ட பணிகள் தீவிரம்: 1.38 லட்சம் ஏக்கரை தாண்டி நடவு
x

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது. இந்த மாவட்டங்களை காவிரி டெல்டா பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறுவை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது இறுதி கட்ட நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் இலக்கை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story