கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு
Published on

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com