நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

வேடசந்தூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வேடசந்தூர் அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சிவசக்திவேல் (வயது 30). கோவா மாநிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, அவரது தந்தை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்தார். ஆனாலும் பெண் ஏதும் கிடைக்காமல் திருமணம் தள்ளிக் கொண்டே போனது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசக்திவேல் ஊருக்கு வந்தார். வீட்டில் அவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு சிவசக்திவேல் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவருடைய பெற்றோருக்கும், கூம்பூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் பதறியடித்து கொண்டு ஓடி வந்தனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com