பழமைவாய்ந்த ஆலமரத்தில் தீ

பழமைவாய்ந்த ஆலமரத்தில் தீ பிடித்தது.
பழமைவாய்ந்த ஆலமரத்தில் தீ
Published on

விராலிமலை தாலுகா காளப்பனூர் கிராமத்தில் ஆலங்குளம் ஆலடியான் கோவில் உள்ளது. கோவிலின் ஒரு பகுதியில் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்றபோது மரத்தின் அடிப்பகுதியில் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பழமைவாய்ந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com