திருவான்மியூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணி தீவிரம்

திருவான்மியூரில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவான்மியூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணி தீவிரம்
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இரவு 7.30 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

இதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். அதே சமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில், கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com